
இன்று மும்ப்ரா இரயில் விபத்து:

மும்ப்ரா இரயில் நிலையத்தில் ஓடும் இரயிலில் இருந்து தவறி விழுந்த 10-15 பயணிகள், நான்கு பேர் பலி பலர் படுகாயம்.
மகாராஷ்டிரா மாநிலம் தானேயில் திங்கட்கிழமை மும்ப்ரா – சத்திரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினல் (CSMT) விரைவு – லோகல் இரயில் தண்டவாளத்தில் தவறி விழுந்த 10 முதல் 15 பயணிகள் இதில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சம்பவம் அறிந்து அந்த இடத்திற்கு விரைந்த இரயில்வே மற்றும் காவல்துறை அதிகாரங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த பயணிகளை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதல்கட்ட விசாரணையில் அதிக கூட்ட நெரிசல் காரணமாக இந்த துயர சம்பவம் நடைபெற்றதாக தெரிய வந்துள்ளது.