
TN 10th Result 2025 Out:
தமிழ்நாட்டில் 2025 ஆம் ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் கடந்த மார்ச் 28 முதல் ஏப்ரல் 15 வரை நடைபெற்றது.12,480 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்ற 4 இலட்சத்து 46 ஆயிரத்து 411 மாணவர்களும், 4 இலட்சத்து 40 ஆயிரத்து 465 மாணவிகளும், 25,888 தனித்தேர்வர்களும், 272 சிறைவாசிகளும் என மொத்தம் 9 இலட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் தேர்வை எழுதினர்.
அதனை தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் 30 வரை நடைபெற்ற நிலையில், தேர்வு முடிவுகள் இன்று (மே 16) வெளியாகின.
இன்று காலை 09:00Am மணிக்கு பத்தாம் வகுப்பு, மதியம் 02:00Pm மணிக்கு பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியாகும் என தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வி இயக்ககம் ஏற்கனவே அறிவிப்பும் செய்திருந்தது.
தேர்வு முடிவுகளை கீழ்க்கண்ட இணையதளங்களில் மாணவர்கள் தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தங்கள் மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம்.