Home Guard Job Recruitment 2026:
தமிழ்நாட்டில் உள்ள விழுப்புரம் மாவட்டத்தில் ஊர்க்காவல் படைக்கான (14/02/2026) தேர்வு நடைபெற உள்ளது.
தகுதி:
- பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 20 முதல் 40 வயது உள்ள ஆண் பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
- ஆண்கள் 165 சென்டிமீட்டர் மற்றும் பெண்கள் 155 சென்டிமீட்டர் உயரம் இருக்க வேண்டும்.
- கடலோர ஊர்க்காவல் படைக்கு கட்டாயம் நீச்சல் தெரிந்திருக்க வேண்டும்.
- தேசிய மாணவ படை, மாநில, மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள், அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
விழுப்புரம் தாலுகா காவல் நிலைய வளாகத்தில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 6 முதல் பிப்ரவரி 11) வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
குறிப்பு:
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ், மார்பளவு புகைப்படம், ஆதார் அட்டை அசல் அல்லது நகல் ஆகியவற்றை தேர்வுக்கு எடுத்து செல்ல வேண்டும்.