சென்னையில் உள்ள 19 மண்டலங்களில் வருகின்ற 13.06.2026 அன்று பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது.
பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சேவைகள் மற்றும் நலன்களை தமிழக மக்கள் எளிதாக பெறும் வகையில், தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை குறைதீர்ப்பு சிறப்பு மூலம் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த முகாம்களில் ரேஷன் அட்டை தொடர்பான குறைகள், புதிய விண்ணப்பங்கள், பெயர் சேர்த்தல் அல்லது பெயர் நீக்குதல், முகவரி மாற்றம் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன.
மேலும் ரேஷன் கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்பட்டு வருகிறது.
இந்த அனைத்து ரேஷன் சேவைகளும் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்களில் பெறப்படும் கடவுச்சொல் (OTP) வழியாக மேற்கொள்ளப்படும் என்பதால் குடும்ப அட்டைதாரர்கள் பதிவு செய்யப்பட்ட கைபேசியுடன் மண்டல அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்.
சென்னையில் உள்ள உணவுப்பொருள் வழங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை நடைபெறும். சென்னையில் உள்ள 19 மண்டல அலுவலக பகுதியில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இச்சேவையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.