Trichy District Village Assistant Recruitment 2025:
திருச்சி மாவட்டத்தில் உள்ள 15 கிராம உதவிப் பணியாளர் காலியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் காலியிடங்களை நிரப்ப அந்தந்த பகுதிகளுக்கு அருகில் இருக்கும் தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்டுகிறது.இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க https://www.trichy.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
கிராம உதவி பணியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து PDF வடிவில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, அதனைப் பூர்த்தி செய்து 21/08/2025 மாலை 05:45 மணிக்கு முன் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பத்தைக் கவனமாகப் படித்து ஒவ்வொரு கிராமத்திற்கும் குறிப்பிட்ட இனத்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. மேலும் அந்தப் பணிக்கு நீங்கள் தகுதியுடையவரா? எனத் தெரிந்து கொண்டு விண்ணப்பிக்க வேண்டும்.
தமிழ்நாடு மாநில மற்றும் மத்திய அரசு பணிகள்பற்றித் தெரிந்து கொள்ள நமது tamilblogger.com இணையதளத்துடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Trichy District Village Assistant Recruitment 2025 (Job Details):
| நிறுவனத்தின் பெயர் | திருச்சிராப்பள்ளி வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை |
| வேலை வகை | தமிழ்நாடு அரசு வேலை |
| மொத்த காலி பணியிடங்கள் | 15 Village Assistant Post |
| வேலை இடம் | திருச்சிராப்பள்ளி மாவட்டம் |
| விண்ணப்பம் பெறப்படும் முதல் தேதி | 23/07/2025 |
| விண்ணப்பம் பெறப்படும் கடைசி தேதி | 21/08/2025 மாலை 05:45 மணிக்கு முன் |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.trichy.nic.in |
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள தாலுகா வாரியாகக் கிராம உதவிப் பணியாளர் காலிப்பணியிடங்கள்:
Job Vacancy in Trichy (Taluk Vice) :
| 1. | தொட்டியம் தாலுகா – 06 |
| 2. | திருவெறும்பூர் தாலுகா– 05 |
| 3. | திருச்சிராப்பள்ளி தாலுகா– 04 |
தொட்டியம் வருவாய் வட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்கள்:
- வாள்வேல்புத்தூர் (1)
- சின்னப்பள்ளிபாளையம் (1)
- பெரியபள்ளி பாளையம் (1)
- கிடாரம்
- அலகரை
- முள்ளிப்பாடி
திருவெறும்பூர் வருவாய் வட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்கள்:
- கூத்தைப்பார் (1)
- பத்தாளபேட்டை (1)
- கும்பக்குடி – வேலாயுங்குடி (1)
- பனையக்குறிச்சி (1)
- கீழமுல்லக்குடி (1)
திருச்சிராப்பள்ளி வருவாய் வட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்கள்:
- பஞ்சப்பூர் (1)
- புத்தூர் (1)
- பிராட்டியூர் மேற்கு (1)
- பாண்டமங்கலம் (1)
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்களுக்கு எனக் குறிப்பிட்ட இனத்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.அதனைக் கீழே உள்ள PDF ஐ பார்த்துத் தெரிந்து கொண்டு அந்தப் பணிக்கு விண்ணப்பித்தால் வேலை கிடைக்க கூடிய வாய்ப்பு அதிகம்.
கிராம உதவிப் பணியாளர் கல்வித்தகுதி:
- பத்தாம் வகுப்பு (10th Pass) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் தாலுகாவில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
- தமிழ் மொழியில் பிழையின்றி படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
- விண்ணப்பிக்கும் நபர் அதே தாலுகாவில் நிரந்தரமாக வசிப்பவராக இருந்தால் அந்தக் கிராமத்தில் உள்ள பதவிக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
வயது வரம்பு:
| 1. | UR – 21 முதல் 32 வரை |
| 2. | BC/MBC/SC/ST/SCA – 21 முதல் 37 வரை |
| 3. | PWD – 21 முதல் 42 வரை |
இதர தகுதிகள்:
21.08.2025 அன்று விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுதித் தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்திருக்க வேண்டும்.
வசிப்பிடம், மிதி வண்டி / இருசக்கர மோட்டார் வாகனம் ஓட்டும் திறன், தமிழில் வாசிக்கும் மற்றும் எழுதும் திறன், நேர்காணல் ஆகியவைகளுக்கு தனித்தனியே மதிப்பெண்கள் வழங்கப்பட்டு ஒட்டுமொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் தரவரிசைப் பட்டியல் தயார் செய்யப்பட்டு காலிப் பணியிடங்களுக்குப் பணிநியமனம் செய்யப்படும்.
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் நாளன்று உடற்தகுதி சான்றிதழினை தமிழ்நாடு அரசுப்பணியாளர் அடிப்படை விதிகளுள் விதி-10-ன்படி சமர்ப்பித்தல் வேண்டும்.
தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
அழைப்புக்கடிதம் பெறுவது மட்டுமே பணி நியமனத்திற்கான ஆணையெனக் கருதப்பட மாட்டாது.
பரிசீலனையில் விண்ணப்பதாரர்கள் அளித்த தகவல்கள் தவறு எனக் கண்டறியப்பட்டால் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
நேர்முகத் தேர்வின்போது அசல் சான்றுகள் சரிபார்க்கப்படும். ஆவண நகல்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
கிராம உதவிப் பணியாளரின் சம்பள விபரம்:
தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாகத் தேர்வு செய்யப்படும் கிராம உதவிப் பணியாளர்களுக்கு மாதம் ரூபாய்.11,100 முதல் 35,100 வரை சம்பளமாக வழங்கப்படும்.
தேர்வு முறை:
- எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
- சான்றிதழ் சரிபார்ப்பு
How to Submit Trichy District Village Assistant Recruitment 2025 Job Application:
விண்ணப்ப படிவத்தினை https://www.trichy.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் திருச்சிராப்பள்ளி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ கடைசி நாளான 21.08.2025 அன்று மாலை 05.45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதன்பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
வாசித்தல் மற்றும் எழுதும் திறனறித்தேர்விற்கும், நேர்முகத்தேர்விற்கும் உரிய நாள் குறிப்பிட்டு விண்ணப்பதாரர்களுக்கு தனியே கடிதம் அனுப்பப்படும்.
முக்கிய தேதிகள்:
| விண்ணப்பம் பெறப்படும் முதல் தேதி | 23/07/2025 |
| விண்ணப்பம் பெறப்படும் கடைசி தேதி | 21/08/2025 மாலை 05:45 மணிவரை |
| தேர்வு நடைபெறும் தேதி | |
| நேர்முகத்தேர்வு நடைபெறும் தேதி |
திருச்சி மாவட்டத்தில் உள்ள கிராம உதவிப் பணியாளர் பதவிக்கு விண்ணப்ப மற்றும் அறிவிப்பு இணைப்புகள்:
| திருச்சிராப்பள்ளி மாவட்ட அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பு | இங்கே தொடவும் |
| கிராம உதவிப் பணியாளர் பணி விண்ணப்ப இணைப்பு (Download Application) | இங்கே தொடவும் |