
நாளை வடகாடு பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தம்!!!
நாளை புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதன்காரணமாக வடகாடு, மாங்காடு, கொத்தமங்கலம், புள்ளான்விடுதி, ஆலங்காடு, பள்ளத்துவிடுதி, பசுவயல், அரையப்பட்டி, கீழாத்தூர், சூரன்விடுதி ஆகிய பகுதிகளில் நாளை (17.05.25) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் குமாரவேல் தெரிவித்துள்ளார்.